செஞ்சி : விழுப்புரம், கடலுார் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடைபெற உள்ள 'தமிழகத்தை சீரமைப்போம்' நிகழ்ச்சிகளில் கட்சியினர் திரளாக பங்கேற்க, கட்சியின் விழுப்புரம் மண்டல மாநிலச் செயலாளர் ஸ்ரீபதி அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக 'தமிழகத்தை சீரமைப்போம்' நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்ற உள்ளார். நாளை 21ம் தேதி பகல் 12:30 மணிக்கு செஞ்சி கூட் ரோட்டிலும், 2:30 மணிக்கு செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மாளிகையிலும் பேசுகிறார்.தொடர்ந்து, 22ம் தேதி காலை 9:00 மணிக்கு கண்டாச்சிபுரம் கூட்ரோடு. 11:00 மணிக்கு விழுப்புரம் யோகலட்சுமி மஹால். மதியம் 12:00 மணிக்கு நெல்லிக்குப்பம் நகர். 2:30 மணிக்கு கடலுார் திவான் பகதுார் சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபம்.மாலை 5:00 மணிக்கு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ஓட்டல் கிராண்ட் செரினா. மாலை 6:00 மணிக்கு திண்டிவனம் ஐஸ்வர்யா பவன் (ஓட்டல் ஆரியாஸ் அருகில்) நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றுகிறார்.கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கமல்ஹாசனின் கரங்களை வலுப்படுத்த திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE