மேட்டூர்: மேட்டூர் அணைக்கு, ஏழு மாதங்களில், 192 டி.எம்.சி., நீர் வந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடகா, ஆண்டுதோறும் தமிழகத்துக்கு, ஜூன் முதல் மே வரை, 177.25 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். அதிலும், ஜூன் முதல் டிசம்பர் வரை, ஏழு மாதங்களில், 164.50 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். நடப்பாண்டு, தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால், கர்நாடகா அணைகள் நிரம்பி, உபரிநீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள, காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தீவிரம் அடைந்த பருவமழையாலும், மேட்டூர் அணைக்கு தொடர்ச்சியாக தண்ணீர் வந்தது. கடந்த ஜூன் முதல், நேற்று வரை, மேட்டூர் அணைக்கு, 192 டி.எம்.சி., நீர் வந்துள்ளது. இது, 2020 - 21ல், கர்நாடகா வழங்க வேண்டிய நீரை விட, 14.75 டி.எம்.சி., நீர் கூடுதல். நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 106.52 அடி, நீர்இருப்பு, 73.55 டி.எம்.சி.,யாக இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE