மும்பை: அடுத்த 6 மாதங்களுக்கு, மஹாராஷ்டிராவில் பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனாவின் இரண்டாவது அலை வீச வாய்ப்பு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் முதல்வர் உத்தவ் கூறுகையில், மாநிலத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இரவு ஊரடங்கு அல்லது முழு ஊரடங்கு அறிவிக்கப்படாது. வரும் முன் காப்பதே சிறந்தது. இதனால்,அடுத்த 6 மாதம் பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE