விழுப்புரம் : விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயிலில் மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்காக பைப்புகள் அமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயிலில், கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி பல அரசு துறைகள் சார்ந்த அலுவலகங்கள் அமைந்துள்ளது. இதையொட்டி, இங்கு பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காகவும், அரசு ஊழியர்கள் பணிக்காகவும்தினந்தோறும் வந்து செல்கின்றனர்.வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் முன்பு, கால்நடைகள் உள்ளே வருவதை தடுப்பதற்கு பெரிய பைப்புகளால் போடப்பட்டுள்ள பாதையில் சில தினங்களுக்கு முன்பு முதியவர் ஒருவரின் கால் சிக்கியது. பின், பொக்லைன் வரவழைக்கப்பட்டு, இரும்பு பைப்புகளை நீக்கி, முதியவரை மீட்டனர்.
பெருந்திட்ட வளாகத்தை கடந்து செல்லும் மக்களுக்கு, ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள பைப்-லைன்களுக்கு இடையேயுள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் பெரிய பைப்புகளுக்கு இடையே சின்ன பைப்புகளை வைத்து பதிக்கும் பணியில், ஊழியர்கள் வெல்டிங் வைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE