விழுப்புரம் : டில்லியில் போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு, விழுப்புரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த நிகழ்ச்சிக்கு, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., மாநிலக்குழு சரவணன், மா.கம்யூ., மாவட்டக்குழு ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இதில், மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லியில் நடக்கும் போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE