விழுப்புரம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் புனித பிரான்சிஸ் சவேரியர் தேவாலயத்தில் நடந்த, ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இணைப்பொதுச்செயலாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். இதில், புதுச்சேரி, கடலுார் மறைமாவட்டத்தில் காலியாக உள்ள பேராயர், ஆயர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.தலித் கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலிறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE