கடலுார் : கடலுாரில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
கவுரவத் தலைவர் ராஜதுரை தலைமை தாங்கினார். பொதுச் செயலர் சீனுவாசன் வரவேற்றார். மாவட்ட வங்கி ஊழியர் சங்க அவைத் தலைவர் முருகேசன், உதவித் தலைவர் ரமணி முன்னிலை வகித்தனர். தலைவர் பாலன் துவக்க உரையாற்றினார். மாநிலத் தலைவர் வைரப்பன், இணை செயலர் ரவிச்சந்திரன், பொதுச் செயலர்கள் வெங்கடேஸ்வரன், பார்த்தசாரதி, பொரு ளாளர் சுப்ரமணியன் விளக்க உரையாற்றினர்.வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் ஸ்ரீதரன், தலைவர் மீரா, ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் திருமலை வாழ்த்திப் பேசினர். கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளி்க்க வேண்டும்.
ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE