சிறுபாக்கம் : தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க மாவட்ட செயலர் கணேசன் எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், தி.மு.க., மகளிரணி சார்பில் இன்று (21ம் தேதி) மாலை ௩:00 மணியளவில் விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதில், கடலூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட மகளிரணி, மகளிர் தொண்டர் அணி, முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, கிளை நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகள், தொ.மு.ச., நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டணி கட்சி, விவசாயிகள், மாணவர்கள் உட்பட அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE