பள்ளிப்பட்டு : மருமகள் சந்தேக மரணம் தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த மாமனார், நேற்று, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இறந்தார்.
இதையடுத்து, அவரது உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.பள்ளிப்பட்டு அடுத்த, கர்லம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், பெருமாள், 60. இவரது மகன், சந்திரபோஸ், 25. மருமகள் திவ்யா, 23.திவ்யா, கடந்த வாரம் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்த புகாரின்படி, பள்ளிப்பட்டு போலீசார், பெருமாள் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து, திருவள்ளூர் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.
இதில், பெருமாளுக்கு நேற்று காலை, உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும், பின், சென்னை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் இறந்தார்.தகவல் அறிந்த பெருமாளின் உறவினர்கள், நேற்று காலை, கர்லம்பாக்கம் -- பள்ளிப்பட்டு சாலையில், மறியலில் ஈடுபட்டனர். பள்ளிப்பட்டு போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE