அம்பத்துார் : அம்பத்துாரில், கணவர் கோவிலுக்கு வராத காரணத்தால், பெண் துாக்கிட்டு தற்கொலை செய்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அம்பத்துார், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ரகு, 50. இவரது மனைவி கீதா, 46. தம்பதிக்கு, மகள் மற்றும் மகன் உள்ளனர். நேற்று முன்தினம், திருமுல்லைவாயல், தாமரை நகரில் உள்ள அய்யப்பன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது.அதில், கீதா பங்கேற்றார். ஆனால், நிச்சயம் பங்கேற்பதாக தெரிவித்த, அவரது கணவர் ரகுவால், மற்றொரு அவசர அலுவல் காரணமாக, பங்கேற்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால், நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டில் அனைவரும் துாங்கிய பின், கீதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE