கடலுார் : டில்லி போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு கடலுாரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் 32 பேர் குளிரால் இறந்தனர். அவர்களுக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலுார் ஜவான்ஸ்பவன் அருகில் நடந்தது.மாவட்ட அமைப்பாளர் மாதவன் தலைமை தாங்கினார். தி.மு.க., மாநில தேர்தல் பணிக்குழு செயலர் புகழேந்தி, அகில இந்திய காங்., உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத்தலைவி வாலண்டினா, மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன், சுப்ராயன், இந்திய கம்யூ., மாவட்ட செயலர் துரை, மாநிலக்குழு உறுப்பினர் குளோப், வி.சி., கட்சி பார்லிமென்ட் தொகுதி செயலர் தாமரைச் செல்வன், மாவட்ட செயலர் முல்லைவேந்தன், ம.தி.மு.க., மாவட்ட செயலர் ராமலிங்கம் அஞ்சலி செலுத்தி பேசினர். மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE