கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பம், உப்பலவாடி மெயின்ரோட்டில் உள்ள பத்மாவதி நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம், நடந்தது.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். லியாகத்அலிகான் தலைவராகவும், எட்வர்டு ஜெயக்குமார் துணைத் தலைவராகவும், ராதாகிருஷ்ணன் செயலாளராகவும், ஆறுமுகம் பொருளாளராகவும், பன்னீர்செல்வம், கதிர்வேல் ஆகியோர் இணை செயலாளராகவும், ரங்கநாதன், துணை பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் பத்மாவதி நகர் பூங்கா பராமரிப்பு, தெருமின் விளக்கு பராமரிப்பு, கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்தல், குறுக்கு தெருக்களுக்கு தார் சாலை அமைக்க வலியுறுத்துதல், வடிகால் வாய்க்கால் அமைக்க கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE