கடலுார் : கடலுாரில் யோகா, நடனம் என பல்வேறு பிரிவுகளில் சாதனை நிகழ்த்திய மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடலுாரில் நாட்டிய சிறகுகள் கலைக் கூடம் மற்றும் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில், உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. ஆணி மீது யோகா செய்வது, ஒரு காலில் நடனம் ஆடுவது, குட்டிகர்ணம் அடித்து தேசத் தலைவர்களின் பெயரை கூறுவது என பல்வேறு சாதனைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து காட்டிய மாணவ, மாணவியருக்கு உலக சாதனை நிகழ்த்திய தற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.சாதனை நிகழ்த்திய மாணவ, மாணவியருக்கு கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமை தாங்கி பரிசு வழங்கினார்.
மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ், சுரேஷ், சண்முகராஜா, ராதாகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினர். சாதனை மாணவர்களை உருவாக்கிய ஏஞ்சலின்ெ ஷரிலுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.சுரேஷ் தீனா நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE