கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 24,515 ஆக அதிகரித்துள்ளது.
கடலுார் மாவட்டத்தில் நோய் அறிகுறியுடன் 3 பேர், பாதிக்கப்பட்டவர் களுடன் தொடர்பில் இருந்த 10 பேர் என மொத்தம் 13 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 515 ஆக அதிகரித்துள்ளது.நேற்று, 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 133 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 274 பேருக்கு பரிசோதனை செய்ததில், 4 லட்சத்து 67 ஆயிரத்து 220 பேருக்கு தொற்று இல்லை. 539 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
தொற்று பாதித்த 65 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரத்தைச் சேர்ந்த 55 வயது நபர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா ஏற்பட்டு நேற்று இறந்தார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 281 ஆக அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE