நன்மங்கலம் : நன்மங்கலம் ஊராட்சியில், ஆங்காங்கே கொட்டப்படும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நன்மங்கலம் ஊராட்சியில், 20க்கும் மேற்பட்ட நகர்களும், 50க்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன.அங்கு, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஊராட்சி எல்லைக்குள், ஆங்காங்கே குப்பை மலை போன்று குவிக்கப்பட்டுள்ளது.இவை, முறையாக அகற்றப்படுவதில்லை. அவ்வப்போது பெய்யும் மழையால், குப்பையில் தேங்கும் தண்ணீரால், கொசு உள்ளிட்டவை உற்பத்தியாகி, மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் நிலவுகிறது.
சாலையோரம் கொட்டப்படும் குப்பையில், உணவு தேடும் கால்நடைகள் அவற்றை கிளறி சாலையில் விடுவதால், அடிக்கடி, வாகன ஓட்டிகள் விபத்துக்களையும் சந்திக்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர், ஆங்காங்கே உள்ள குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE