திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த ஆலம்பாடி ஊராட்சியில், மங்களூர் வட்டார சுகாதாரத்துறை சார்பில் டெங்கு முன் தடுப்புப்பணிகள் நடந்தது.
ஆலம்பாடி ஊராட்சி தலைவர் கொளஞ்சி பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முரளி முன்னிலை வகித்தார். மங்களூர் வட்டார சுகாதாரத்துறை சார்பில் நடந்த முகாமில், நடமாடும் மருத்துவக்குழு மருத்துவர் அபிநயா, மருந்தாளுநர் சரவணன் ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுநர் ராஜசேகர் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், அரிபாஸ்கர், முத்துச்செல்வன், நவின்ராஜ், வேல்முருகன், கொளஞ்சிநாதன், அபினேஷ், வைத்தீஸ்வரன் மற்றும் தற்காலிக கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், ஊராட்சி துாய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொசுப்புழு கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.
கொசுக்களை ஒழிக்க புகைமருந்து தெளிக்கப்பட்டது. ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE