புதுடில்லி: டில்லியில் விவசாயிகள் போராட்டத்தில், உத்திரகண்ட் முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டம் 24 நாட்களாக நடந்து வருகிறது. விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு குவிகிறது. இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தில், உத்திரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

டில்லி - உ.பி., எல்லையான காஸிப்பூரில் விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், வேளாண் சட்டங்ளுக்க எதிரான பதாகைகளை தாங்கி, மத்திய அரசுக்கு எதிரான முழக்கமிட்டார். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE