பேரூர்:வனத்தில் தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட கடமான் குட்டி, நல்ல ஆரோக்கியத்துடன் வலம் வருகிறது.போளுவாம்பட்டி வனச்சரகம் நரசீபுரம் வைதேகி பால்ஸ் பகுதியில், கடந்த மாதம் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, தாயை பிரிந்த நிலையில், கடமான் குட்டி ஒன்று கிடந்துள்ளது. வனத்துறை ஊழியர்கள் குட்டியை மீட்டு, தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.அது முடியாததால், குட்டியை அலுவலகத்துக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து பராமரித்து வந்தனர். தற்போது, குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் ஊழியர்களுடன், துள்ளி குதித்து வலம் வருகிறது. பால் மட்டுமே குடிப்பதால், புற்கள் உண்ணும் அளவுக்கு வந்தவுடன் வனத்தில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE