போத்தனூர்:கோவை மேற்கு மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சி சார்பில், தலைமை அலுவலகம் திறப்பு விழா நடந்தது.சுந்தராபுரம் அடுத்த சிட்கோ அருகே நடந்த விழாவில், கட்சியின் மாநில துணை தலைவர் மகேந்திரன் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, 600 பேருக்கு அரிசி, பருப்பு, கோதுமை. காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. குறிச்சி அரவான் மைதானம் பகுதியில் கட்சி கொடியேற்றி, மரக்கன்றுகளை நட்டார். மேற்கு மாவட்ட செயலாளர் சிவா தலைமை வகித்தார். குறிச்சி பகுதி செயலாளர் வினோபா, குனியமுத்தூர் பகுதி செயலாளர் மோகன்ராஜ், மண்டல செயலாளர ரங்கநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE