கோவை:இன்று, வியாழன் மற்றும் சனி கோள் சந்திக்கும் அபூர்வ நிகழ்வை காண, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.சுமார், 400 ஆண்டுகளுக்கு பின் நடக்க உள்ள இந்த அரிய நிகழ்வை, அனைவரும் கண்டு களிக்கும் வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கற்பகம் பல்கலையில் கோவை மண்டல அறிவியல் மையத்துடன் இணைந்து, வான்நோக்கு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.இன்று மாலை, 06.30 மணியில் இருந்து, 7.30 மணி வரை நேரடியாக காணலாம். இரு கோள்கள் நிகழ்வு குறித்து விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. பொதுமக்கள், கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE