பொங்கலுார்:தென்னை விவசாயிகள் கூறியதாவது:இந்தாண்டு தேங்காய் விளைச்சல் குறைந்ததால் விலை உச்சத்தில் உள்ளது. ஒரு தேங்காய், 25 ரூபாய், ஒரு கிலோ கொப்பரை, 128 ரூபாய்க்கு விலை போகிறது. விலை உயர்வை சாதகமாக்கி, தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்வோர், கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். கலப்படம் அதிகரித்தால், தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்படும். இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். வரும் தை முதல், வரத்து அதிகரிக்கும். அப்போது இயல்பாகவே விலை சரியும். கலப்படம் தொடர்ந்தால், விலை மேலும் சரியும் வாய்ப்புள்ளது. எனவே, கலப்படம் செய்வோர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE