அனுப்பர்பாளையம்:'தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி அமைய பாடுபட வேண்டும்' என, கட்சியின் பிரசாரம் மற்றும் வெளியீட்டு பிரிவு மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பா.ஜ., கட்சியின் பிரச்சார மற்றும் வெளியீட்டு பிரிவு, மாநில செயற்குழு கூட்டம், பெருமாநல்லுார் எம்.எல்.ஆர். திருமண மண்டபத்தில் நடந்தது. பிரச்சார பிரிவு மாநில தலைவர் குமரிகிருஷ்ணன், தலைமை வகித்தார். 32 மாவட்டங்களில் இருந்து, 530 பேர் கலந்து கொண்டனர்.இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானம்;துாய்மையான ஆன்மிக அரசாட்சி அமைய பாடுபடுவது, மத்திர அரசின் செல்வ மகள் சேமிப்பு திட்டம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, மாநிலம் முழுக்க, 36 அடி கொடி கம்பத்தில், 5 அடி உயரம், 7.5 அடி நீளத்தில் பா.ஜ., கொடி பறக்க விடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாநில துணை தலைவர்கள் தங்கராஜன், மகேஷ், வடக்கு மாவட்ட தலைவர் சுப்புராஜூ, மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழ் தாமரை இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE