அவிநாசி:அவிநாசி அருகே, 'ஸ்டீல்' நிறுவனத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிய வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டனர்.அவிநாசி அருகேயுள்ள சின்ன கானுாரில் உள்ள ஸ்டீல் நிறுவனத்தில், சில மாதங்களுக்கு முன், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்பு, தகடுகள் திருடப்பட்டன. புகாரின் பேரில், சேவூர் போலீசார் விசாரித்து வந்தனர்.வாகன சோதனையின் போது, ஆலத்துார் செக் போஸ்ட்டில், வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தனர்.இதில், சிறுமுகையை சேர்ந்த ஜெயபிரகாஷ், 20, விஜயன், 32, ஆறுமுகம், 33, உசேன், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முனியப்பன், 33, முருகேசன், 40, நாகராஜ், 45, அன்னுாரை சேர்ந்த ஆனந்தன், 37, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.அவர்கள் திருடிய செம்பு தகடு மற்றும் ஒரு கார், வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE