திருப்பூர்:மாவட்டத்தில், கொரோனா குணமான, 70 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக, 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 16 ஆயிரத்து 584 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும், 70 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.இதுவரை, 15 ஆயிரத்து 851 பேர் குணமடைந்தனர். தற்போது, கோவை, திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களில், 519 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில், இதுவரை, 214 பேர் பலியாகி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE