கூடலுார்:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வன பகுதியில், கடந்த மாதம், 20ம் தேதி பெண் புலி இறந்து கிடந்தது.அங்கு தவித்து கொண்டிருந்த அதன், இரண்டு ஆண் குட்டிகளை வனத்துறையினர் மீட்டு, சென்னை வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவைகள் தனி பராமரிப்பு அறையில், வைத்து கால்நடை டாக்டர் மேற்பார்வையில், 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது, நல்ல நிலையில் உள்ளன. இதனிடையே, புலிக்கு விஷம் வைத்து கொன்றது ரசாயன பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.முதுமலை துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,''புலியை விஷம் வைத்துக் கொன்றவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது; குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவது. இறந்த புலியின், குட்டிகள் வண்டலுார் உயிரியல் பூங்காவில் நல்ல நிலையில் உள்ளன,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE