பொள்ளாச்சி;மாடு வைத்திருப்போர், மானியத்தில் சாண எரிவாயு கலன் அமைக்க ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.இன்றைய நவீன சூழலில், சமையலுக்கு எரிவாயு அடுப்பு இல்லாத வீடுகளே இல்லை எனலாம். இதில், 'கேஸ்' சிலிண்டர் வாங்க மாதம், 700 ரூபாய் வரை செலவழிக்கின்றனர். இதற்கு, அரசு மானியம் வழங்குவதால், அரசுக்கும் நிதிச்சுமை ஏற்படுகிறது. பொள்ளாச்சி போன்ற கிராமம் சார்ந்த பகுதிகளில், கணிசமானவர்கள் மாடு வளர்க்கின்றனர். இவர்கள், சாண எரிவாயு கலன் அமைத்து அடுப்பு எரிப்பதால், மாதா மாதம் கேஸ் சிலிண்டருக்கு செய்யும் செலவும் சேமிக்கப்படும்; அரசின் நிதிச் சுமையும் குறையும். எரிவாயு எடுக்க பயன்படுத்திய சாணத்தை, இயற்கை உரமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.சாண எரிவாயு கலன் அமைக்க, குறைந்தது இரண்டு மாடுகள் வளர்க்க வேண்டும். வீட்டின் அருகே இட வசதி இருக்க வேண்டும். சாண எரிவாயு கலன், காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் வாயிலாக, பயிற்சி பெற்ற நிபுணர்களால் அமைத்து தரப்படுகிறது. அமைத்த பிறகு, 12 ஆயிரம் ரூபாய் பின்னேற்பு மானியமாக பெறலாம். ஆர்வமுள்ளவர்கள், தங்கள் பகுதி ஒன்றிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE