உடுமலை:உடுமலை, திருமூர்த்திநகர் பெருமாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தது.உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில் அதிகாலை முதல் தனுர்மாத சிறப்பு பூஜை துவங்கியுள்ளது. தொடர்ந்து, திருமூர்த்திநகரிலுள்ள பூமி நீளா நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் சுவாமி கோவிலிலும், சிறப்பு பூஜை நடக்கிறது.பெருமாளுக்கு, மார்கழி மாதம் நிறைவு பெறும் வரை, அபிேஷகத்துடன் தனுர் மாத சிறப்பு பூஜை அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது. அங்கு வரும் பக்தர்கள், அரசு விதிமுறைகளை பின்பற்றி வழிபடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE