ஆனைமலை:வேலை கிடைக்காத விரக்தியில், இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.ஆனைமலையை சேர்ந்த முகமதுரபிக், 48, மகன் அசாருதீன், 19. இவர் பிளஸ் 2 முடித்து விட்டு மேற்படிப்பு படிக்காமல், வேலை தேடியும் கிடைக்கவில்லை. வேலை கிடைக்காத விரக்தியில் கடந்த, 16ம் தேதி, இந்திராநகர் பெரியணை கால்வாய் அருகே விஷ மருந்து குடித்து வீட்டுக்கு வந்துள்ளார்.இதை அறிந்த பெற்றோர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று, அசாருதீன் மயக்க நிலையில் இருந்துள்ளார். பெற்றோர் அவரை மீட்டு வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE