மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் சர்ச்சில், கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில், தத்து குடும்பத்திற்கும், ஏழைகளுக்கும், புத்தாடைகள், அரிசி ஆகிய உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தன.நிகழ்ச்சிக்கு வின்சென்ட் தே பவுல் சபை தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். செயலாளர் எலிசபெத் வரவேற்றார். பங்கு பாதிரியார் ரொசாரியொ, டீகன் பிரதர் ஜானி சகாயராஜ் ஆகியோர், தத்து குடும்பத்தினருக்கும், ஏழைகளுக்கும் புத்தாடைகள் வழங்கினர்.நிகழ்ச்சியில், மைக்கல், அஜந்தா, அறிவழகன் ஆகியோர் பங்கேற்றனர். 30 பேருக்கு புத்தாடைகள், அரிசி ஆகிய உதவி பொருட்கள் வழங்கப்பட்டன. பொருளாளர் மணிசேகரன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE