மேட்டுப்பாளையம்:மருதூரில் உள்ள, ஆஞ்சநேயர் கோவிலில், மார்கழி மாத முதல் சனிக்கிழமை விழா நடந்தது.காரமடை அடுத்த மருதூரில் அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை விழா நடைபெறும். நேற்று மார்கழி முதல் சனிக்கிழமையை அடுத்து, அனுமந்தராய சுவாமி கோவிலில் உள்ள, ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு, செந்தூரக் காப்பு மேனி அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைக்கு பின், செந்தூரக் காப்பு மேனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு, ஆஞ்சநேயர் அருள் பாலித்தார்.இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சுவாமியை வழிபட்டனர். கொரோனா தொற்று காரணம் கருதி, அன்னதானமும், சொற்பொழிவும் நடைபெறவில்லை. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ஆஞ்சநேய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE