சூலூர்:பீடம்பள்ளியில் 'அம்மா மினி கிளினிக்'கை, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.சூலூர் ஒன்றியத்தில் ஆறு இடங்களில் 'அம்மா மினி கிளினிக்' திறக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, பீடம்பள்ளி ஊராட்சியில், மினி கிளினிக் நேற்று திறக்கப்பட்டது.உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, கிளினிக் கை திறந்து வைத்து பேசுகையில், ''கொரோனா பரவலை தடுக்க, அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. அதனால், நோய் பாதிப்பு குறைதுள்ளது. மினி கிளினிக்குகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ வசதி உடனடியாக கிடைக்கும்,'' என்றார்.எம்.எல்.ஏ., கந்தசாமி, யூனியன் சேர்மன் மாதப்பூர் பாலு, சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார், ஊராட்சித் தலைவர்கள் குமாரவேல், கந்தவேல், வட்டார மருத்துவ அலுவலர் உமர் பரூக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE