ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை, சட்ட அலுவலர்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட எஸ்.பி., கார்த்திக் தலைமை வகித்தார். கூடுதல் எஸ்.பி., ஜெயசிங், ஏ.டி.எஸ்.பி., லயோலா இக்னேசியஸ் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் முன்மாதிரியான வாதத்தால் எதிரிகளின் தண்டனைக்கு வழிவகுத்த வக்கீல்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அரசு வக்கீல்கள், மனுதாரர்கள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருவாடானை: திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருவாடானையில் நடந்தது.2018-19ம் ஆண்டிற்கான பயிர் இன்சூரன்ஸ் தொகை 25 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.100 சதவீதம் வழங்க கோரி வரும் ஜன.6ல் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றபட்டது.
ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் நிலங்களை விசாரணை என்ற பெயரில் சில ஏக்கர் நிலங்கள் நீக்கப்பட்டுள்ளது.ஆகவே விடுபட்ட நிலங்களுக்கும் சேர்த்து பயிர் இன்சூரன்ஸ் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தபட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE