ராமேஸ்வரம் : தனுஷ்கோடியில் நாய்கள் கடித்து உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு சிகிச்சையளிக்க வனத்துறை வராததால், மீனவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
தனுஷ்கோடி கடலோரத்தில் உள்ள அடர்ந்த சவுக்கு மரக்காடுக்குள் குரங்குகள் வசிக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் உணவுகளை குரங்குகள் உட்கொண்டது. ஊரடங்கினால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் இல்லாததால், உணவுக்காக தனுஷ்கோடி சர்ச் அருகில் வசிக்கும் ஏராளமான மீனவர்களின்குடிசை பகுதியில் இரண்டு குரங்கள் சுற்றி திரிந்தது.
நேற்று அங்குள்ள நாய்கள் ஒரு குரங்கை கடித்து குதறியதில் உயிருக்கு போராடி கடலோரத்தில் கிடந்தது.மீனவர்கள் வனத்துறையிடம் தெரிவித்தும், நேற்று வரை குரங்கை மீட்க வனத்துறை வராததால் மீனவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE