திண்டுக்கல் : 'பிளாஸ்டிக் தடையால் திண்டுக்கல்லில் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
அவர் தெரிவித்தது: ஊரக தொழில் துறை அமைச்சர், பிளாஸ்டிக் தடையால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க அறிவித்துள்ளார். ஒரு முறை பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்தாண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. இதனால் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது.
அந்நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வங்கி கடனில் 50 சதவீதம், அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை, உற்பத்திக்கு தடை செய்த நாள், நிவாரண பெற விண்ணப்பித்த நாள் வரை, எது பிந்தையதோ அதில் இருந்து நிவாரணம் வழங்கப்பட உள்ளது. தகுதியான நிறுவனங்கள் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகலாம். விவரங்களுக்கு 0451-2470893 ல் பேசலாம் என, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE