நிலக்கோட்டை : பேரூராட்சிக்குட்பட்ட கடைகளில் ஊரடங்கு காலத்தில் வாடகை வசூல் செய்ய பேரூராட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொேரானா ஊரடங்கு மார்ச்சில் இருந்து செப்டம்பர் வரை நீடித்தது. அதன் பின் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டது. இருந்தும் வழக்கம் போல் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் ஸ்டாண்டு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஊரடங்கு காலத்திற்கான வாடகையை அரசு தள்ளுபடி செய்யும் என கடைகளை நடத்தி வருபவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஏப்ரல், மே மாதங்களுக்கு மட்டுமே வாடகையை தள்ளுபடி செய்துள்ளது.
ஜூன் மாதத்தில் இருந்து வாடகை வசூலிக்க அரசு உத்தரவிட்டதால் பேரூராட்சி நிர்வாகங்கள் வாடகை வசூல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இது குறித்து பஸ் ஸ்டாண்டில் கடை வைத்திருப்பவர்கள் கூறுகையில்,'' பஸ்கள் இயங்காததால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அரசு 2 மாதம் மட்டுமே வாடகை தள்ளுபடி செய்துள்ளது. ஊரடங்கு காலம் முழுவதும் வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும்'', என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE