வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் முஸ்லிம் தொண்டு, சாரணர் இயக்கம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், தமிழன் மாமன்றம் சார்பில் இலவச கண் பரிசோதனை, ரத்த தானம் முகாம் நடந்தது. அ.தி.மு.க., ஜெ., பேரவை கிழக்கு மாவட்ட செயலாளர் முகமது யூசுப் அன்சாரி தலைமை வகித்தார்.
முஸ்லிம் தொண்டு இயக்கம் மாவட்ட செயலாளர் முகமது சலீம், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் நாகூர் கனி முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., முத்துசாமி முகாமை துவக்கி வைத்தார். வத்தலக்குண்டு மற்றும் கிராமப்புற நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். 17 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முஸ்லிம் தொண்டு இயக்கம் மாநில தலைவர் முகமது யூனுஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE