கோவை:அரசு வேலை வாங்கித்தருவதாக, 4.5 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை செல்வபுரம் எல்.ஐ.சி., காலனியை சேர்ந்தவர் அஜீத் ராஜா, 35. அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருப்பூர் குமாரபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 31 என்பவர் அறிமுகமானார்.வருமான வரித்துறையில் பணிபுரிந்து வருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதை உண்மை என நம்பிய அஜீத் ராஜா, 4.5 லட்சம் ரூபாய் கொடுத்தார். நீண்ட நாட்களாகியும், வேலை வாங்கித்தராததால், அஜீத்ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.மணிகண்டனிடம் கேட்டபோது, முறையாக பதில் அளிக்கவில்லை; பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து அஜீத் ராஜா செல்வபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் மணிகண்டனை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE