திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அரசு கிராம செவிலியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.மாநில பொதுச்செயலாளர் பாப்பா வரவேற்றார். தலைவர் நிர்மலா தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் ரெமா, பொருளாளர் பத்மாவதி, அமைப்புச் செயலாளர் இருதயமேரி, பிரச்சார செயலாளர் லதா மங்கையர்கரசி பங்கேற்றனர்.'அரசு மினி கிளினிக்கிற்கு தனியாக செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்க வேண்டும். தனி கட்டிடம் ஒதுக்க வேண்டும். மகப்பேறு நிதியுதவி திட்டம் தாமதமாவதை சரி செய்ய வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பெண் ஊழியர்கள் பணிபுரியும் இடங்களில் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி பாலியல் புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும்' ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE