திருமங்கலம் : --திருமங்கலம் பள்ளப்பட்டி ராமு மனைவி இன்பரசி 32. வயிற்று வலிக்கு டிச.,18ல் திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது.
திடீர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வந்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேறு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். உறவினர்கள் ஏற்க மறுத்த நிலையில் இன்பரசி இறந்தார். தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி நேற்று உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். டி.எஸ்.பி., வினோதினி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE