மதுரை : மதுரையில் 24 மணி நேர விமான சேவையை துவக்க வாய்ப்புகள் இருக்கிறதா என கேட்டறிந்த மத்திய நெடுஞ்சாலை, போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தஞ்சாவூரில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு டில்லி செல்லும் வழியில் மதுரை விமான நிலையம் வந்த இணை அமைச்சரை பா.ஜ., மாநில பொது செயலாளர் ஸ்ரீநிவாசன், நகர் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து 24 மணி நேர விமான சேவையை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் இணை அமைச்சரிடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவனிடம், ''எத்தனை விமானங்கள் வந்து செல்கிறது, 24 மணிநேர சேவையை துவக்க வாய்ப்புகள் இருக்கிறதா'' என இணை அமைச்சர் விசாரித்தார். இதுகுறித்து விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக இணை அமைச்சர் உறுதியளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE