மதுரை : “தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி அமைய மக்கள் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும்” என ஹிந்து டெமாக்ரடிக் ப்ரண்ட் (எச்.டி.எப்.,) ஆலோசனை குழு தலைவர் மாஜி தலைமை செயலர் ராம்மோகன்ராவ் வலியுறுத்தினார்.
மதுரையில் இதன் மாநில செயற்குழுக் கூட்டம் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடந்தது. அமைப்பாளர்கள் மனோஜ்குமார், எம்.சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். தேசிய ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் ராஜாஜி, மாநில பொதுச்செயலாளர் ஜலேந்திரன், செயலாளர் சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராம்மோகன்ராவ் பேசியதாவது: தமிழககோயில்கள் சார்ந்த பூஜாரிகள், அர்ச்சகர்கள் என 10 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் கோயில், கோயில் நிலங்களை பாதுகாத்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் காக்க நலவாரியம் அமைக்க வேண்டும்.ஓய்வூதியம் அளிக்க வேண்டும். எச்.டி.எப்.,வுடன் லஞ்சத்திற்கு எதிரான அமைப்புகள் ஒன்றிணையலாம். தமிழகத்தில் திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன. செயல்பாடுஇல்லை. லஞ்சம், ஊழல் இல்லாத அரசால் மட்டுமே நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். வரும் தேர்தலில் மக்கள் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE