நியூயார்க்: மஹாராஷ்டிராவின், மும்பையைச் சேர்ந்த, வைர வியாபாரி, நிரவ் மோடி, 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, வெளிநாடு தப்பிச் சென்றார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட நிரவ் மோடி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை, இந்தியா அழைத்து வருவது தொடர்பான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நிரவ் மோடியின் இளைய சகோதரர் நெஹல் மோடி, 41, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வைர வியாபாரம் செய்து வருகிறார். நிரவ் மோடியின் வழக்கு தொடர்பாக, அவரது சகோதரர் நெஹல் மோடிக்கு எதிராக, 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீஸ், 'ரெட் கார்னர் நோட்டீஸ்' அளித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த, 'எல்.எல்.டி. டைமண்ட்ஸ்' என்ற நிறுவனத்திடம் இருந்து, கடந்த, 2015ல், 20 கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்களை, நெஹல் மோடி கடனில் வாங்கினார். பின், அந்தத் தொகையை திருப்பிச் செலுத்தாமல், அந்நிறுவனத்தை ஏமாற்றினார். இந்த வழக்கு, அமெரிக்காவின், நியூயார்க், உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நெஹல் மோடி, மோசடி செய்துள்ளதாக, உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE