சென்னை : ராயபுரத்தில் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட, இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்தவர் ராம், 35. இவர், நேற்று முன்தினம், ராயபுரம் அங்காளம்மன் கோவில், ஆதாம் தெருவில் நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள், ராமின் மொபைல் போனை பறித்து தப்பினர்.அப்போது, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மர்ம நபர்களை பிடித்து, ராயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அப்ரித் பால் சிங், 20; ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த சதாம் உசேன், 29, என்பது தெரியவந்தது. இருவரும், வட சென்னையில் தங்கி, மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களை, நேற்று கைது செய்த போலீசார், மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE