சென்னை : கலெக்டர் தலைமையில், வாராந்திர குறைதீர் கூட்டம், எப்போது நடத்தப்படும் என, பொதுமக்கள் எதிர்ப்பார்கின்றனர்.
'கொரோனா' ஊரடங்கு அமலுக்கு வந்த, மார்ச் முதல், சென்னை கலெக்டர் அலுவலகத்தில், திங்கள் கிழமைகளில், நடக்கும் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.பொதுமக்களின் வசதிக்காக, குறைதீர் நாளான திங்கட்கிழமைகளில், சமூக பாதுகாப்பு அதிகாரிகளால், அலுவலக நுழைவாயிலில், பொதுமக்களிடம் இருந்து, மனுக்கள் பெறப்படுகின்றன.தற்போது, கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால், மீண்டும் கலெக்டர் தலைமையில், வாராந்திர குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, 'குறைதீர் முகாம் நடத்துவது குறித்து, அரசு தான் முடிவெடுக்க வேண்டும்; அரசு அறிவுறுத்திய பின், கலெக்டர் தலைமையில், கூட்டம் நடத்தப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE