திருவேற்காடு : 'தனக்கு விருப்பமில்லாத திருமணத்தை செய்து வைத்துவீட்டீர்கள்' என, தந்தைக்கு வீடியோ அனுப்பிய, புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை, திருவேற்காடு, கஸ்துாரிபாய் அவென்யூவைச் சேர்ந்தவர் ஜெயராமன், 25; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரக்சனா, 21, என்பவருக்கும், கடந்த, 26ம் தேதி திருமணம் நடந்தது.இந்த நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் தனியாக இருந்த ரக்சனா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது மாமியார், இரவு வீட்டிற்கு சென்றபோது, ரக்சனா தற்கொலை செய்தது தெரிய வந்தது.இது குறித்து, திருவேற்காடு போலீசார் விசாரித்தனர்.
அதில், தற்கொலைக்கு முன், தன் தந்தையின் மொபைல் போனுக்கு, அவர் ஒரு வீடியோ அனுப்பி உள்ளார்.அதில், 'எனக்கு விருப்பம் இல்லாத திருமணத்தை செய்து வைத்து விட்டீர்கள். அதனால், இந்த முடிவை எடுத்துவிட்டேன்' என, கண்ணீருடன் குறிப்பிட்டிருக்கிறார்.போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE