சோழிங்கநல்லுார் : சோழிங்கநல்லுார் மண்டலத்தில், மழை நீர் வடிய சேதப்படுத்தப்பட்ட, 200க்கும் மேற்பட்ட இடங்களை, சீரமைக்கும் பணி துவங்கியது.
சமீபத்திய கன மழையில், சோழிங்கநல்லுார் மண்டலத்தில், துரைப்பாக்கம், நீலாங்கரை, செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகள், கடுமையாக பாதிக்கப்பட்டன.மேலும், பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய பகுதிகளும் பாதிக்கப்பட்டன. மழை நீர் வடிய தடையாக இருந்த சாலை, வடிகால், நடைபாதை, தடுப்புச் சுவர்கள் தகர்க்கப்பட்டன.இந்த வகையில், சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 200க்கும் மேற்பட்ட இடங்களில், வெள்ளம் வடிய, சேதப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை சீரமைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணி நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE