குன்றத்துார் : இருசக்கர வாகனத்தில், குட்கா விற்பனை செய்தவரை, குன்றத்துார் போலீசார் கைது செய்தனர்.
சென்னை அடுத்த குன்றத்துார், கோவூர் பகுதிகளில் உள்ள, கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்காவை, இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்து, மர்மநபர் ஒருவர் விற்பனை செய்வதாக, குன்றத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் குன்றத்துார் -- போரூர் சாலையில், மூன்றாம் கட்டளை அருகே, நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவரை மடக்கி, சோதனை செய்தனர்.அதில், குட்கா இருப்பதை கண்ட போலீசார், வாகன ஓட்டியை, காவல் நிலையத்திற்கு, அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த, முருகேசன், 51, என, தெரிந்தது. மேலும், குன்றத்துாரில் தங்கி, தடை செய்யப்பட்ட குட்காவை, இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, கடைகளுக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது.அவரை, கைது செய்த போலீசார், 35 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, எங்கெல்லாம் குட்காவை பதுக்கி வைத்துள்ளார் என விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE