சென்னிமலை: வேளாண் சட்டம் குறித்து, பா.ஜ., சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. மத்திய அரசின், வேளாண் சட்டம் குறித்து, பா.ஜ., சார்பில், கருமாண்டிசெல்லிபாளையத்தில், விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது. பெருந்துறை நகர தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஈரோடு தெற்கு மாவட்ட கல்வியாளர் பிரிவு துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மத்திய அரசின், விவசாயிகளுக்கான, 29 நலத்திட்டங்களை விளக்கமாக எடுத்துரைத்தார். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், நகர விவசாய அணி தலைவர் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன், ஈரோடு வடக்கு மாவட்ட துணை தலைவர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE