ஈரோடு: மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டுப்பதிவு இயந்திரம், வாக்காளர் தங்கள் அளித்த ஓட்டை சரிபார்க்கும் இயந்திரம் என, மொத்தம், 2,810 இயந்திரங்கள், இரு கன்டெய்னர் லாரிகளில், ஈரோட்டுக்கு நேற்று வந்தது. ஈரோடு, கொல்லம்பாளையம் ரயில்வே காலனி, மாநகராட்சி அரசு மேல்நிலை பள்ளியில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அறையின் உறுதி தன்மையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், டி.ஆர்.ஓ., கவிதா ஆய்வு செய்தார். இங்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அறையின் உட்புறம், வெளிப்புறம், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE