கோபி: பெண் பஞ்., செயலாளருக்கு, கொலை மிரட்டல் விடுத்தவர் மீது, நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் தமிழரசி, 37; கோட்டுப்புள்ளாம்பாளையம் பஞ்., செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் மதியம் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது குருமந்தூரை சேர்ந்த மாரிமுத்து, 40, வந்தார். 'எனக்கு சொந்தமான இடத்தில், மரம் நட எதற்கு குழி பறித்தீர்கள்?' என தகாத வார்த்தை பேசி, பணி செய்ய விடாமல், கொலை மிரட்டல் விடுத்தாராம். தமிழரசி புகாரின்படி, நம்பியூர் போலீசார் வழக்குப்பதிந்து, மாரிமுத்தை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE